யாழில் அதிகரித்து வரும் மோட்டார் வாகன விபத்து
யாழில் அதிகரித்து வரும் மோட்டார் வாகன விபத்து யாழ்ப்பாண பிரதேசத்தில் அதிக அளவிலான மோட்டார் வாகன விபத்துக்கள் இளைஞர்கள் மூலமாகவே இடம்பெற்று வருவதை நாளாந்தம் பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றோம் . மோட்டார் வாகன வீதி விபத்தானது போதைப் பொருள் பாவனைகள், சாலை விதிமுறைகளை மீறுதல் போன்றவற்றின் மூலம் இடம்பெறுகின்றது. அந்தவகையில் தற்கால இளைஞர்கள் சமூகப் பார்வையை தமது பக்கம் ஈர்ப்பதற்காகவும் அவசர தேவைகளுக்காகவும் வீதி விதிமுறைகளை மீறி சாலைகளில் கடுகதியில் செல்கின்றனர் . இதன் காரணமாக அவர்களும் வீதியில் செல்பவர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர் . வீதி விபத்துக்களினால் ஒவ்வொரு 24 மணித்தியாலத்திற்கும் 8 பேர் இறக்கின்றனர் என News 1st (2 Jan, 2022) மூலம் அறிய முடிகின்றது. உதாரணமாக யாழ் பிராந்தியப் பத்திரிகையில் வெளியான முதற் பக்கச் செய்தியாக "மோட்டார் வாகனத்தில் கடுகதியில் சென்ற இளைஞர் பலி " மற்றும் "மோட்டார் வாகனம் மோதியதில் குடும்பப்பெண் பாதிப்பு " இவ்வாறான செய்திகளை தினமும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது...