Posts

Showing posts from November, 2019
Image
பரவி  வரும் டெங்கு நோயும் அதிலிருந்து எம்மை பாதுகாத்தலும்  டெங்கு எனப்படுவது ஒரு வகை வைரஸ் கிருமி.இது நுளம்புகள் மூலம் மனிதர்களிற்கு பரவி நோயுண்டாக்குகிறது.டெங்கு காய்ச்சல் இன்று வேகமாக பரவி வருகிறது  எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நாடு முழுவதும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பரவுகிறது.குறிப்பாக வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை காணுகின்றோம்.வைத்தியசாலைகளிற்கு அநேகமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே வருகை தருவதை காண முடிகின்றது.எம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.         எவ்வாறு பரவுகிறது?  ஏடிஸ் ஈஜிப்டி என்னும்  உடலில் கோடுள்ள பகலில் கடிக்கும் நுளம்பு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.இந்த நுளம்பு நோயால் பாதிக்கப்பட்ட  ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை  எடுத்து மற்றவர்களிற்கு பரப்புகிறது.இந்த நுளம்பு அநேகமாக மழைக்காலத்தில்  இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களாக பூச்சாடிகள்,பிளாஸ்டிக், தேங்காய் சிரட்டைகள் மற்றும் டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கி...

HTML அறிமுகம்

HTML அறிமுகம்   HTML என்பது இணையப் பக்கங்களை உருவாக்கும் ஒரு கணினி மொழி  இந்த HTML-5 tutorial-ல் basic and advanced concepts வழங்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மாணவர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒவொரு topic-க்கும் step-by-step clear and explanation கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் easy ஆகாவும், மிக வேகமாக கற்றுக்கொள்ள முடியும். நீங்கள் ஒரு new HTML leaner-ஆக இருந்தால், beginner level-ல் இருந்து ஒரு professional level-க்கு கற்றுக்கொள்ளமுடியும். HTML உடன் CSS மற்றும் JavaScript கற்றுகொண்ட பிறகு நீங்களாகவே own attractive static and dynamic website சொந்தமாக உருவாக்க முடியும். இந்த tutorial-ல் நம்முடைய focus on HTML only. HTML அறிமுகம் பற்றியும் அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் எழுத்துப் படிமுறையில் பார்ப்போம். படிமுறை:01 Notepad++ இம் மென்பொருளை தரவிறக்கம் செய்வதன் மூலம் HTML,CSS and JS ஆகிய கணனி மொழிகளை எழுத இம் மென்பொருள் உதவுகிறது. படிமுறை: 02 Brackets மென்பொருளை இயக்கி   Ctrl +N அழுத்தி புதிய பக்கம...

வாக்களிப்பது உங்கள் உரிமை

வாக்களிப்பது உங்கள்  உரிமை வாக்களிப்பது உங்கள் ஒவ்வொருவருடைய உரிமையும் பொறுப்பும் ஆகும்.வாக்காளர் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்பியவாறு இரகசியமாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்க முடியும்.நீங்கள் வாக்களிப்பதனை தடுக்கவோ இடையூறு செய்யவோ எவராலும் முடியாது,உங்களால் அளிக்கப்பட்ட வாக்கு யாருக்கானது என்பதை எவராலும் எச் சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ள முடியாது. தமிழ் மக்களாகிய நாம் எமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரத்தக்க நல்ல தலைவர் யார்?பாரபட்சமின்றி தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவர் யார்? என்பவற்றை தெளிவாக கணிப்பிட்டு வாக்களியுங்கள். ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்கினை நாளைய தினம் சனிக்கிழமை காலை 7மணி முதல் மாலை 5மணி வரை வாக்களிக்க முடியும்.கால தாமதமின்றி நேர காலத்துடன் உங்களது வாக்களிப்பு நிலையங்களிற்கு சென்று வாக்களியுங்கள். வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது உங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்வது கட்டாயமானது. இதற்கென தேசிய அடையாள அட்டை,செல்லுபடியான கடவுச் சீட்டு ,செல்லுபடியா...
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற ஈரான் -இலங்கை நட்புறவுத் திரைப்பட விழா  யாழ் பல்கலைக்கழக  ஊடக கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் ஈரானிய பண்பாட்டு நிலையத்தின் அனுசரணையுடன் ஈரான் -இலங்கை நட்புறவு  திரைப்பட விழா நவம்பர் மாதம் 8ம் 9ம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. 8ம் திகதி காலை 10 மணி அளவில் கலைப்பீட பீடாதிபதி கே.சுதாகர் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.ஈரானிய பண்பாட்டு நிலையத்தின் அலுவலர் மகாகமகே அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து சிரேஷ்ட எழுத்தாளர் ஜேசுராஜா அவர்களும் உரையாற்றினார்.  அதனைத் தொடர்ந்து முதலாவது திரைப்படமாக சர்வதேச விருது பெற்ற "ராணாவின் மெளனம் " என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.திரைப்பட நிறைவின் பின் திரைப்படம் பற்றிய கருத்துக் கலந்துரையாடல்களும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் "வீ காவ் எ கெஸ்ற்" என்ற திரைப்படமும் மறுநாள் காலை 10 மணிக்கு "கொக்கற்ரி" என்ற திரைப்படமும் பிற்பகல் 3 மணிக்கு "சீசன் ஒவ் நர்கீஸ்"  என்ற திரைப்படமும் திரையிடப்பட்டது . இந்நிகழ்வின் பின்னர் இத் த...