Posts

Showing posts from May, 2020
Image
மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் ஓர் பார்வை மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படமானது மலைவாழ் மக்களின் நிய வாழ்க்கையையும் அவர்களது வாழ்வியலையும் அவர்களது துயரங்கள், துன்பங்கள்  என்பவற்றையும் வெளிப்படையாக  எமது கண்டு முன் கொண்டு வந்த திரைப்படமாக இது  அமைகிறது.  இப் படத்தின் தயாரிப்பாளராக நடிகர் விஐய்  சேதுபதியும் இப் படத்தின்  இயக்குனராக லெனின் பாரதியும் காணப்படுகின்றனர். தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை  அடிவாரத்தில் இருந்து மேலுள்ள கிராமங்களிற்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமி(ஆண்டனி )  படத்தின் நாயகன்.  இவரின் வாழ்க்கை வழியே , அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்வதாக அமைகிறது இப் படம். சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும்  என்பதே ரங்கசாமியின் வாழ்நாள் கனவாக இருந்தது. அதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கின்றான். இதற்கிடையே அவரின் மாமன் மகள்  ஈஸ்வரியை( காயத்ரி ) திருமணம் செய்து கொள்கிறார். அவர்களிற்கு ஒரு மகன் பிறந்து விட்டான். இவ்வாறு இருக்க அவர்களிற்கு  ஒரு நிலம் கிடைத்தது. அதனை வாங்கச் செல்லும் ப...
Image
முடியாது ஒரு காரியத்தை செய்யும் முன்பு  அதனை நாம் செய்ய முடியாது  என்று முடிவெடுத்தால் நாங்கள் போகின்ற பாதையின் தொடக்கத்திலேயே அப் பாதையின் கதவை  இறுகச் சாத்தி விடுகின்றோம். அதற்கு பதிலாக முடியும் என்று எண்ணி விட்டாலே நமது பாதை தானாக வழி விடும்.  சிலர் ஆசைப்படுவதுண்டு அது அவர்களின் மேலெழுந்த வாரியான நினைப்பு ஏன் தெரியுமா?  அது அவர்களிற்கு நடக்காது என்று தெரியும்.  அவர்களது மனதில் நடக்காது என்ற எண்ணம் இருந்தால்  எப்படி  அது சாத்தியமாக முடியும்.  இதே ஆசையில் நியாயம்  இருந்தால் நம் மீது திடமான நம்பிக்கை  இருந்தால் முழுமையான ஈடுபாடு இருந்தால் எமது  ஆசை இலட்சியமாக மாறிவிடும்.   எப்பொழுதும் எமது மனதில் பலவீனத்தை வளரவிடக் கூடாது. அப் பலவீனம் எமது பலத்தை வேரறுத்து விடும்.  எங்களுடைய முயற்சி பயனளிக்கவும் , நம்பிக்கை தழைத்து செழிக்கவும் நாம் பலவீனத்திற்கு எதிராக போராட வேண்டும்.  வேலைப்பளுவை கடினமாக  எண்ணிவிடக் கூடாது.  அது மனத்தை பொறுத்தது.  வேலையை திட்டமிட்டு சிறுகச் சிறுக செய்வதன் மூ...
Image
தற்போதைய நிலைமையில் சமூக ஊடகங்கள் நன்மையாக செயற்படுகின்றதா? தீங்காக செயற்படுகிறதா?  சமூக  ஊடகம் ( Social Media ) என்பதை சுருக்கமாக சொன்னால் " ஒவ்வொருவருடைய கருத்துக்களை படைக்கவும் அவற்றைப் பகிரவும் ஆக இணைக்கப்பட்ட ஒரு தளம் தான் சமூக ஊடகமாகும். சமூக ஊடகங்களாக Facebook, whatsapp, viber, Instagram, Twitter,  Internet,  Google plus, LinkedIn. .. எனப் பல உள்ளன. இச் சமூக ஊடகங்களிற்கும் மரபார்ந்த ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்களிற்கும்  இடையே அதிகமான  வித்தியாசம் உள்ளன. பொதுவாக மரபார்ந்த  ஊடகங்கள்  ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.  நிறுவனம் என்ன சொல்ல நினைக்கின்றதோ அதைத் தான் நுகர்வோர் அனைவரும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சமூக ஊடகங்கள் தனிநபர்களினுடைய கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு செய்தியை உருவாக்குபவரும் அவற்றை பகிருபவரும் தனிமனிதராகிய நுகர்வோரே. அதனால்  இச் சமூக ஊடகம் அனைவராலும் விரும்பப்படுகின்ற ஒரு  ஊடகமாக தம்மை வடிவமைத்துக் கொண்டுள்ளது. தற்காலத்தில்  Smart Phone இல்லாமல் யாரை...
Image
கொரோனாவால் பாதிப்படையும் தினக்கூலி மக்கள் உலக நாடுகள் அனைத்திலும் மிகப் பெரிய  அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றாக  covid 19  என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தை  ஏற்படுத்துகிறது. இந் நோயினால் பாதிக்கப்பட்ட நபரினை தொடுவதன் மூலமும் அவரின் இருமல், தும்மல் ஆகியவற்றின் மூலமும் இந் நோய் பரவலடைகின்றது. சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய இந் நோய் தொற்று தற்போது உலக நாடுகள் அனைத்திலும் உயிர்  அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. கொரோனா ஒரு உலகளாவிய தொற்று  என உலக சுகாதார  அமைப்பு குறிப்பிடுகின்றது. உலக நாடுகள் அனைத்திலும்  இந் நோய் நாளிற்கு  நாள் அதிகரித்து வருகிறது  இதன் காரணமாக பின்தங்கிய மக்கள் பாரிய சவால்களை  எதிர்கொள்கின்றனர். சமூகங்களின் மையத்தை தாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற ஒன்றாக இது  உருவெடுத்துள்ளது. அரசியல்,  சமூக,  பொருளாதார ரீதியில் பல்வேறு தாக்க விளைவுகளை  ஏற்படுத்தி  வருகிறது. கொரோனாவின் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். நாளாந்த தொழில் புரிந்து வாழ்க்கை நடத்த...