அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

 எல்லோர் வாழ்க்கையில் வாழ்க்கைப் புத்தகம் ஒன்று உள்ளது. ஆனால் அந்த புத்தகத்தை இந்த உலகமே வாசிக்க செய்வது அவரவர் கையில்தான் உள்ளது கனவுகளின் நாயகனான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் 1931ம் ஆண்டு October 15 ம்  திகதி  தந்தை ஜைனுலாப்தீனுக்கும் தாய் ஆஷியம்மாவிற்குமகனாக பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில்சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தார்.

அப்துல் கலாம் அவர்கள் இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால் இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார்.

தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்த பிறகு திருச்சிராப்பள்ளியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954-இல் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர் 1955ல் தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம் ஐ டி யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1960களில் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கிய அப்துல் கலாம் ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்துக் கொடுத்தார். அதன் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்த அவர், துணைக் கோள் ஏவுகணைக்  குழுவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980ஆம் ஆண்டு SLV-111 ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்  செய்தார்.இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. எனவே மத்திய அரசு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான "பத்ம பூஷன்" விருது வழங்கி இவரைக் கௌரவித்தது. 

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் பதவியேற்றார். குடியரசுத் தலைவராக இருந்த இவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏபிஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும் அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது. "கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்" என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் விதைத்தார்.

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப்  மேனேஜ்மென்ட்  மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இறந்தார்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.



Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை