Posts

Showing posts from March, 2021

அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Image
 எல்லோர் வாழ்க்கையில் வாழ்க்கைப் புத்தகம் ஒன்று உள்ளது. ஆனால் அந்த புத்தகத்தை இந்த உலகமே வாசிக்க செய்வது அவரவர் கையில்தான் உள்ளது கனவுகளின் நாயகனான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் 1931ம் ஆண்டு October 15 ம்  திகதி  தந்தை ஜைனுலாப்தீனுக்கும் தாய் ஆஷியம்மாவிற்குமகனாக பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில்சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தார். அப்துல் கலாம் அவர்கள் இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால் இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்த பிறகு திருச்சிராப்பள்ளியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954-இல் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர் 1955ல் தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம் ஐ டி யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரிய...

புண்ணியம் தரும் தைப்பூசம்

Image
 மிகவும் சுபிட்சமான நாளான இன்று தொடங்கும் நல்ல காரியங்கள் எதுவானாலும் சிறந்த பலனை கொடுக்கும் என்பது தொன்றுதொட்டு நம்பிக்கையாகும்.  தைப்பூசத் திருநாள் பற்றிய கதை ஒன்றை நாங்கள் பார்க்கலாம்.   ஒரு நாள் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் அசுரர்களை எதிர்த்து அவர்களை அழிக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் ஓடிச்சென்று அவரது அருளை நாடி நின்றனர். முக்கண் நாயகனை வேண்டி நின்றதால்  எம்பெருமான் தேவர்களை காக்க தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்கினார். அதிலிருந்து வெளியேறிய ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகான குழந்தைகளாக மாறின. அவற்றினை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். ஆறு குழந்தைகளும் ஒன்றாக இணைந்து ஆறு முகத்துடன் முருகன் அவதரித்தார். பின்னர் ஞானப்பழம் கிடைக்காததால் கோபமுற்ற முருகப் பெருமான் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் குடியேறினார். பின்னர் ஒருநாள் அசுரர்களுக்கு அழிவு காலம் வரவே பார்வதிதேவியார் முருகனிடம் சென்று ஞான வேலை தந்தருளினார். இவ்வாறு முருகப்பெருமானுக்கு ஞானவேலை  கொடுத்த நாளே தைப்பூசம் ஆகும். அந்த ஞான வேலைக்  கொண்டு முருகப்பெருமான் அசுர...

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை

அச்சுகலை நுட்பங்கள் காலத்திற்கு காலம் பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளன. அச்சுக்கலை என்பது, அச்சிடுவதற்கான உரைப்பகுதி கற்பதற்கும், அடையாளம் காண்பதற்கும் கவர்ச்சியானதாக இருக்கும் வகையில் அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு கலையும் தொழில்நுட்பமும் ஆகும். அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்துவதானது, அச்செழுத்துக்கள், எழுத்துக்களின் அளவு, வரியொன்றின் நீளம், வரிகளுக்கு இடையிலான இடைவெளி என்பவற்றைத் தெரிவு செய்தல் சொற்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தலுடன், எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தல் போன்றவற்றையும் உள்ளடக்கும். அச்செழுத்துக்களை வடிவமைத்தல் இக்கலைக்கு நெருக்கமான ஒரு கலை. சிலர் இது அச்சுக்கலையினிறும் வேறுபட்டது என்பர். வேறு சிலர் இது அச்சுக்கலையின் ஒரு பகுதி எனக் கருதுவர். பெரும்பாலான அச்சுக்கலைஞர்கள் அச்செழுத்துக்களை வடிவமைப்பதில்லை என்பதுடன், அச்செழுத்துக்களை வடிவமைப்பவர்கள் தம்மை அச்சுக்கலைஞர்களாகக் கருதுவதில்லை. இக்கலையை அச்சு அமைப்பாளர்கள், அச்சுக் கோப்பாளர்கள், அச்சுக் கலைஞர்கள், வரைய வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், காமிக் புத்தகக் கலைஞர்கள், சுவரெழுத்துக் கலைஞர்...

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

21 ஆம் நூற்றாண்டில் பூகோளமயமாதலானது பரந்து விரிந்து காணப்படுகின்றது. இது அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன. இப் பூகோளமயமாதலானது 1980 களிலிருந்து தோன்றி வளர்ந்து வந்துள்ளதாகவும் ஸ்பெயின், போர்த்துக்கல், பிரிட்டன், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலேயே இச் சிந்தனை முதன் முதலாக தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றனர். பூகோளமயமாதல் என்ற பதத்தை பொருளியலாளர்கள் 1981 ஆம் ஆண்டிலிருந்தே பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள் என “தியோடோர் லெவிட் “ (Theodore Levitt) என்பவர் எழுதிய “ சந்தைப் பூகோளமயமாக்கல்” ( Globalization Of Market) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். பூகோளமயமாதல் என்றால் என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையே காணப்படுகிறது. அந்தவகையில் இளம் தலைமுறையினர் அதிகமாக குழப்பப்படுகின்றனர். அவர்கள் பூகோளமயமாதல் மனித சமூகத்திற்கு பாரிய அபிவிருத்திகளை கொண்டு வந்துள்ளதாக நம்புகின்றனர். இதனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் என்பன எட்ட முடியாத வறிய நாடுகளிற்கும் எட்டி ...

புதுயுகம் படைப்போம்

மகா சிவராத்திரி மகிமை

Image
 மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளையே நாம்  மகா சிவராத்திரி என்று சிறப்பிக்கின்றோம்.  பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும் , இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலினால்  கொண்டாடப்படுவது என்பதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. சிவராத்திரி பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன. ஆனாலும் நாம் ஸ்கந்தபுராணத்தில்  கூறப்பட்டிருக்கின்ற ஒரு கதையை பார்க்கலாம் . குருத்ரோகி பலரிடம்  நம்பிக்கை துரோகம் செய்து அவப்  பெயர் பெற்றான். அவன் மீது கோபம் கொண்ட சிலர் அவனை பகல் முழுவதும் ஒரு சிவன் கோவிலில் அடைத்து வைத்திருந்தனர்.     இரவில் வேட்டையாடுவதற்காக வேடன் நதியை கடந்து அக்கரை சென்றான். தரையில் தன் வலையை விரித்து வைத்துக் கொண்டே இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டிருந்த வேடன் பொழுது போக்காக தான் அமர்ந்திருந்த வில்வ மரத்தின் இலைகளை உருவி கீழே வீசி கொண்டிருந்தான். அந்த வில்வ இலைகள் மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தன. அதிகாலையில் மரத்தை விட்டு இறங்கிய வேடன், முன் ,ச...

இலங்கையும் தொழில்நுட்பமும்

https://youtu.be/YiP9KKeSL4Y இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில்நுட்பமானது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மிகப் பெரிய அளவில் தொழில் புரியும் பல்தே சியக் கம்பெனியிலிருந்து சாதாரண பெட்டிக் கடை வியாபாரம் வரைக்கும் தொழில்நுட்பத்தின் தாக்கம் உருவாகியுள்ளது.  இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் இல்லாமல் அதாவது தொழில்நுட்பத்தின் பயன்பாடு இல்லாமல் எந்தவொரு தொழில் முயற்சிகளையும் கொண்டு நடாத்த முடியாது என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. இவ்வாறான தொழில்நுட்பமானது வியாபாரச்  சூழலில் செல்வாக்கு செலுத்தி வியாபாரச் சூழலில் பல்வேறு கட்ட மாற்றத்தினை உருவாக்கியுள்ளது . மனித வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு மனிதர்கள் தமது வாழ்வுக்காக பல்வேறுபட்டவற்றினைப் பயன்படுத்தியுள்ளார்கள். தமது சூழலிருந்தே தமக்கு தேவையானவற்றை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். எனினும் சமூகம் விரிவடைந்ததோடு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வனவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.  ஆரம்ப காலத்தில் தமக்கு தேவையானவற்றை தாமே  உற்பத்தி செய்து கொண்டனர் . பின்னர் தமக்கு மிகச்சிறப்பாக உற்பத்தி செய்யக் கூடியவற்றை மிகையாக உற்பத்...

மாற்று ஊடக பெறுனர்கள்

 மாற்று ஊடகத்தை பயன்படுத்துவோர் அதாவது மாற்று ஊடக கருத்துக்களை பின்பற்றுபவர்கள் மாற்றுஊடகப் பெறுனர்களாவர்.  மாற்று  ஊடகத்திற்கு வெகுசன ஊடகங்களைப் போன்று அதிக எண்ணிக்கையிலான ஊடக நுகர்வோர் காணப்பட்டா விட்டாலும் மாற்று ஊடகத்திற்கு என தனியான நுகர்வோர் எண்ணிக்கை காணப்படுகின்றது. மாற்று ஊடகப் பெறுனர்கள் இரண்டு விடயங்களை ஒப்பிட்டுப் பார்த்து எது உண்மை என  முடிவுக்கு வருபவர்களாக இருப்பர். மாற்று ஊடகப் பெறுனர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும்  ஊடக கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பவர்களாகவும்  இருப்பர். மாற்று ஊடகமானது  வெகுஜன ஊடகங்கள் பேசாத கருத்துகளை பேசுபவையாகவும் சாதாரண மக்களின் வாழ்க்கை வரலாற்றை பேசுபவை யாகவும் அமைகின்றன . மாற்று ஊடக பெறுனர்களுக்கு விளங்கக்கூடிய மொழிநடை கொண்டதாகவே இம் மாற்று  ஊடகங்கள் காணப்படுகின்றது . பெரும் ஊடகங்கள் செய்தியை நுகர்பவர்களாக மக்களை மாற்றிவிட்ட போதும்கூட, அதே மக்கள் "உண்மைக்காக ஏங்குபவர்களாகவும்  இருக்கின்றனர் . எனவே அவர்களுக்கான ஊடகமாகவே இம் மாற்று  ஊடகங்கள் உள்ளன .  உண்மையைச் சொல்லத்தான் ஊடகம் தேவை அந்தவகைய...

போற்றிப் பேண வேண்டிய மகளிர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

Image
 1917 இல் முதலாவது உலக மகா யுத்த காலப்பகுதியில் ரஷ்ய பெண்களால் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்தினை கோரும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் மார்ச் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.  இவ்வாறு பல நாடுகளில் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த சர்வதேச மகளிர் தினம் 1975 இல் ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மேலும் இத்தினம் பரவலாக்கப்பட்டு உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அதாவது இன்றைய மார்ச் 08 இல் கொண்டாடப்பட்டு வருகின்றது. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் போய் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க தொடங்கிவிட்டனர். ஒரு காலத்தில் பெண்களை அடிமையாக நடத்தி வந்தது சமுதாயம் .   பெண் என்பவள் சமைப்பதற்கும் வீட்டு வேலைகளை பார்ப்பதற்கும் என்ற எண்ணம் மாறி இன்று நாடாளும்  அளவிற்கு  பெண்கள் வளர்ந்து விட்டனர். இதனைக்  கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் நாள் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. எனவே இன்றைய மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
Image
 

சாதாரண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாற்று ஊடகம் அவசியமாக உள்ளது

பிரதான ஊடகத்திற்கு வெளியே செயற்படும் ஒரு வெகுஜன ஊடக பாணியாக மக்களின் நலனுக்காக மக்களால் முன்வைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யக்கூடிய ஜனநாயகத் தன்மை கொண்ட வியாபார நோக்கமற்ற ஊடகம் ஊடகம் என கூறப்படுகின்றது. பாரம்பரிய ஊடகப் போக்கிலிருந்து விலகி கொள்கைகளுக்காக செயற்படுவதாகவும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த கூடியதுமான இச் சமூக ஊடகங்கள் வெகுஜன ஊடகங்களால் பேசப்படாத பல விடயங்களினை பேசுபவையாக அமைகின்றது.   மாற்று ஊடகம் ஏன் சமூகத்தில் அவசியமாக உள்ளது என நோக்குவோம். அதாவது அதிகாரம்ற்றவர்களை மன்னிக்க செய்யும் வெகுஜன ஊடக போக்கிற்கும் தனியாள் உடைமைக்கும் எதிரான மாற்று ஊடகம் அடித்தள மக்களை மதிப்பதோடு சமூக, பொருளாதார, பண்பாட்டு,சமய,சாதிய ஆதிக்க அதிகார வர்க்கங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, அதிகாரமற்றவர்களின் குரல்களையும் ஒழிக்க செய்வதற்கு மாற்று ஊடகம் அவசியமாக இருக்கின்றது.   வியாபார நோக்கத்துடன் செயற்படுகின்ற வெகுஜன ஊடகங்களில் இருந்து முற்று முழுதாக மாறுபட்ட ஊடகமான மாற்று ஊடகம் மக்களினுடைய பிரச்சினைகளைப் பேசுவது சமூகத்தின் தேவை என்பதால் மாற்று ஊடகம...

திருக்குறள் - அறத்துப்பால் -குறள் 1

Image

தைப்பூசம் திருநாள்

Image

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்

Image